Header Ads



பிக்கு என்று கூறி, விகாரைக்கு சென்றவர் காட்டுக்குள் ஓடினார் - தகவல் அறிந்தால் உடனடியாக பொலிசாருக்கு அறிவியுங்கள்


தம்மை தேரர் என்று கூறிக்கொண்டு மீகலேவ - ரெஸ்வேஹர ரஜமஹா விகாரைக்கு சென்று அங்கிருந்து தப்பி சென்ற நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

குறித்த நபர் தம்மை தேரர் என்று கூறி நேற்று பிற்பகல் குறித்த விகாரைக்கு சென்றுள்ளார்.

அவர் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் விகாரையின் விகாராபதி வினவியமையை அடுத்து குறித்த நபர் அருகிலிருந்த கஹகல்ல வனப்பகுதிக்குள் தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக மீகலேவ காவல்துறைக்கு அறிவிக்குமாறு காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன கோரியுள்ளார்.


1 comment:

  1. This is the time to banned the yellow dress it is an good dress to cover all thief smugglers rapist etc,...

    ReplyDelete

Powered by Blogger.