Header Ads



பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவி, மயங்கி விழுந்து மரணம்


பரீட்சை எழுதிகொண்டிருந்த 14 வயதான மாணவி, மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

இந்த சோகமான சம்பவம், புத்தளம்- வனாத்துவில்லுவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதில். தரம்-9இல் தோற்றி பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அதில் தோற்றியிருந்த மாணவிகளில் ஒருவர், திடீரென சுகயீனமடைந்தார். அதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போதே அம்மாணவி மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

1 comment:

  1. இது போன்ற பரிதாபகரமான நிகழ்ச்சிகள் இந்த நாட்டில் நடைபெறவே கூடாது.அதற்கான காரணம் மருத்துவ ரீதியிலும் சமூக ரீதியிலும் சரியாக இனம் காணப்பட்டு அவற்றுக்கான மிகச் சரியான தீர்வு காணப்பட்டு இந்த நாட்டில் மாணவச் சமூகத்துக்கு இது போன்ற நிகழ்வுகள் இதன்பிறகு நடைபெறாமல் இருக்க வகைசெய்வது இந்த நாட்டு அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும்.இதனை ஏனைய விடயங்களைப் போல் சாக்குப் போக்குச் சொல்லி குடும்பத்தையும் மற்றவர்களையும் குற்றம்சாட்டி மலுப்பிவிடாமல் அரசாங்கம் இந்த விடயத்தில் சரியாகச் செயற்பட்டு இந்த நாட்டு மாணவர் சமூகத்தின் உயிருக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.