Header Ads



ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக, சுதேவ ஹெட்டியாராச்சி நியமனம்


சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாராச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அவர் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுதேவ ஹெட்டியாராச்சி அடுத்த வாரம் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான சுதேவ ஹெட்டியாராச்சி, சிறந்த அனுபவமிக்க சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆவார்.

25 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றும் அவர், முன்னணி ஊடக நிறுவனங்களில் கடமையாற்றியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.