கொழும்பு துறைமுக நகரப்பகுதியில், இன்னொரு தேசம் உருவாவதை கடுமையாக எதிர்க்கிறேன் - ராஜாங்க அமைச்சர் விதுர
கொழும்பு துறைமுக நகரத்திற்கு என விசேட சட்டங்களை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்புதுறைமுக நகரப்பகுதியில் தனியொருநாடு உருவாவதற்கு வழிவகுக்க கூடிய சட்டங்களை உருவாக்குவதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதியையும் பிரதமரையும் கேட்டுக்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் கொழும்பு போர்ட் சிட்டிக்கு என தனியான சட்டங்கள் உருவாக்கப்படும் என அறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள அவர் நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒரே சட்டம் விதிமுறைகளின் கீழ் நிர்வகிக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னொரு தேசம் உருவாவதை தான் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்ன கடுமையாக எதிர்த்தலும் வேலையில்லை
ReplyDelete