Header Ads



என்னை பதவியில் இருந்து, அகற்ற சூழ்ச்சி - தயாசிறி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கான சூழ்ச்சிகள் நடப்பதை தான் அறிந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர முதல் முறையாக தகவல் வெளியிட்டுள்ளார்.

வீழ்ந்து கிடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மிகவும் சிரமப்பட்டு முன்நோக்கி கொண்டு வந்த என்னை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குமாறு கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சிலர் கோரியிருக்கின்றனர்.

இந்த சூழ்ச்சியானது கட்சிக்குள்ளும்,வெளியிலும் நடக்கின்றன. இந்த சூழ்ச்சியை எதிர்கொள்ள அரசியல் பலம் இருக்க வேண்டும். சூழ்ச்சிகளை எதிர்கொள்ளும் சக்தி இருக்கின்றது. இதனை எதிர்கொள்ள மக்களுடன் அணி திரள்வேன்.

வேலை செய்யும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மாற்றி, தற்போது அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக முன்நோக்கி செல்லும் கட்சியாக மாற்ற நான் செய்த அர்ப்பணிப்புகளை கட்சியின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அறிவார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

- தமிழ்வின் -

No comments

Powered by Blogger.