Header Ads



YMMA அனுசரணையில் குடிநீர், வழங்கும் ஆரம்ப நிகழ்வு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் அனுசரணையில் நாடளாவிய ரீதியில் தேசிய நீர் வழங்கல் சபையின் வழிகாட்டலுடன் குடிநீர் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்பிட்டி பிரதேச செயலக செயலாளரினால் பரிந்துரைக்கப்பட்ட ஐம்பதிற்கும் முற்பட்ட விண்ணப்பதாரிகளின் இல்லங்களை பார்வையிட வை எம் எம் ஏ தெரிவுக்குழு நேரடியாக களத்தில் இறங்கி பார்வையிட்டனர்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தேசியத் தலைவர் சஹீத் எம. ரிஸ்மி தலைமையிலான இக்குழுவில் பேரவையின் தேசிய விவகார தவிசாளர் கே. என். டீன் அவர்கள் புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு முறையான பயனாளிகளை இனங்கண்டு தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.