Header Ads



நமக்குத் தெரியாமலே, நமக்குள்ளே கொரோனா வருமா..?


உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கு கொரோனா வந்து போயிருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் சுவிஸ் ஆய்வாளர்கள்.

கடந்த ஆண்டின் இறுதியில் அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில், எத்தனை பேர் உடலில் கொரோனா ஆன்டிபாடிகள் உள்ளன என பரிசோதித்தபோது, 20 சதவிகிதம் பேர் உடலில் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக, இவர்களில் பலருக்கு, அவர்களுக்கு தெரியாமலே கொரோனா வந்து குனமடைந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், அதனால்தான் இவ்வளவு பேர் உடலில் ஆன்டிபாடிகள் உள்ளன என்றும் பெடரல் சுகாதார அலுவலகம் கருதுகிறது. இதனால், அரசின் கொள்கைகளில் ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இனி மக்களுக்கு ஆன்டிபாடி பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்கள் உடலில் ஆன்டிபாடிகள் இருப்பது தெரியவரும் பட்சத்தில்,ஏற்கனவே அவர்கள் உடலில் போதுமான பாதுகாப்பு உள்ளதால், அவர்களுக்கு தடுப்பூசிச் சான்றிதழ் வழங்கப்படவும் வாய்ப்புள்ளது.

அத்துடன், இந்த கண்டுபிடிப்பு காரணமாக, அவர்களுக்கு மட்டும் ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி போதும் என்ற நிலையும் ஏற்படலாம். 

2 comments:

  1. உண்மை எனக்கும்ஒரு ஊசி மட்டும்தான் காரணம் கொரோனா வந்து போய்விட்டதால்

    ReplyDelete
  2. உண்மை எனக்கும்ஒரு ஊசி மட்டும்தான் காரணம் கொரோனா வந்து போய்விட்டதால்

    ReplyDelete

Powered by Blogger.