Header Ads



தாடியை விட்டுக்கொடுக்காத மொயின் அலி - அவரது தந்தை குறிப்பிடும் உணர்வு ரீதியான விடயங்கள்


இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி குறித்த தனது சர்ச்சைக்குரிய ட்வீட் குறித்து வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விளக்கம் அளித்துள்ளார். அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் தீவிரமான நிலையில், தமது பதிவு நகைச்சுவையாக செய்யப்ட்டது என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய ட்வீட்டை தஸ்லிமா தனது பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தாலும் அவரது கருத்துகளை கடுமையாக எதிர்பார்த்தவர்கள் கோரியடி அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாம் பில்லிங் உட்பட பல வீரர்கள் மற்றும் பல பிரபலங்களும் தஸ்லிமா நஸ்ரினின் ட்வீட்டையும் அவரது விளக்கத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மொயினின் தந்தை என்ன கூறுகிறார்?

மொயின் அலியின் தந்தை முனீர் அலி ஆங்கில நாளேடான த இந்தியன் எக்ஸ்பிரஸில் தனது நோக்கத்துக்காக, இத்தனை பேர் மத்தியில், தனது மகனை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தஸ்லிமாவின் அறிக்கையை "இஸ்லாமிய வெறுப்புவாதம்" என்று விவரித்த அவர், "அவர் தனது கருத்துக்களை ஒரு கிண்டலுக்காக என்று கூறுகிறார், மேலும் அவர் அடிப்படைவாதத்திற்கு எதிரானவர் என்றும் கூறுகிறார். கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டால், தனது ட்வீட் எவ்வளவு தீவிரமானது என்பதை அவரே உணர்வார். ஒரு முஸ்லீம் நபருக்கு எதிரான, பழமைவாத, இஸ்லாமிய வெறுப்புக் கருத்து இது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சுய மரியாதையும் பிறர் மீதான மரியாதையும் இல்லாத ஒருவரால் தான் இவ்வளவு கீழ்த்தரமான கருத்தைக் கூற முடியும் " என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தஸ்லிமாவின் கருத்து தனக்குக் கோபமேற்படுத்துவதாகவும் ஆனால் அதை வெளிப்படுத்துவது புத்திசாலித்தனமாகாது என்றும் இப்போதைக்கு, அவர் ஒரு அகராதியை எடுத்து கிண்டலின் பொருளைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே விமர்சனத்துக்கு ஆளான மோயின் அலி

முன்னரே பயிற்சியாளர் உட்பட, பலரும் மோயினை தாடியை அகற்றும்படி கூறியுள்ளனர் என்றும் அவரது மதத்தைப் பற்றிக் கூறியுள்ளனர் என்றும் இது குறித்துத் தனது கவலையை மோயினிடம் வெளியிட்ட போது, எந்த விமரிசனத்துக்கும் தான் கவலைப்படவில்லை என்றும் தான் இப்படித் தான் என்றும் மோயின் உறுதியாக இருந்ததாகவும் அவரது தந்தை குறிப்பிடுகிறார்.

தான் கூறிய படி மோயின் தாடியை அகற்றவில்லை என்ற காரணத்துக்காகவே ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு மறுத்தார் ஒரு பயிற்சியாளர் என்று கூறும் முனிர் அலி, அந்தப் பயிற்சியாளரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

2014 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கு எதிரான ஒரு போட்டியில், 'சேவ் காசா' மற்றும் 'பாலஸ்தீனத்தின் சுதந்தரம்' என்று எழுதப்பட்ட பட்டைகளைக் கட்டிக் கொண்டு மோயின் களமிறங்கினார். போட்டி நடுவர் டேவிட் பூன் ஐ.சி.சி விதிகளை மேற்கோள் காட்டி பட்டையை அகற்றுமாறு கூறினார். அந்த நேரத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மோயினுக்கு ஆதரவளித்தது.

இந்தச் சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்ட மோயினின் தந்தை, "அவர் எதைச் சரியென்று நம்பினாரோ அதைச் செய்தார். ஆனால் அது அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டபோது, அவர் அதை மீண்டும் செய்யவில்லை." என்று கூறுகிறார்.

கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான மத, இன வாதம்

ஆஸ்திரேலிய வீரர் தன்னை ஒசாமா என்று அழைத்ததாக மோயின் அலி குற்றம் சாட்டினார். 2006 ஆம் ஆண்டில் டீன் ஜோன்ஸ் வர்ணனையாளராக இருந்த போது, இடையில், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் அம்லாவை ஒரு 'பயங்கரவாதி' என்று குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.