Header Ads



றிசாத்தையும், சகோதரரையும் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க, பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை


கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கொழும்பு –பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள வீட்டில் வைத்து நேற்று (24) அதிகாலை கைது செய்யப்பட்டார்.

அத்துடன் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள சாட்சியங்களை பரிசீலனை செய்வதற்கு 72 மணித்தியாலங்கள் போதாமையை கருத்தில் கொண்டு 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.