Header Ads



மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் இயக்கியதால், ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு - யாழில் சோகம்


யாழ்ப்பாணம் மட்டுவிலில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை 8 வயது சிறுவன் இயக்கிய நிலையில் ஒன்றரை வயது குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதி குழந்தை உயிரிழந்துள்ளது. 

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சிறுவன் இயக்கியுள்ளான். 

இதன்போது மோட்டார் சைக்கிளுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயதான குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. 

இதனையடுத்து குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை 8 வயது சிறுவனின் சகோதரி என தெரிவிக்கப்படுகின்றது. 

-யாழ். நிருபர் பிரதீபன்-

No comments

Powered by Blogger.