Header Ads



கொரோனா உயிரிழப்பு 630 ஆக உயர்வு - இன்றும் 5 பேர் மரணம், புதிதாக 516 பேருக்கு தொற்று


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை இன்றைய தினம் புதிதாக 516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 97,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்களில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,668 ஆகும்.

No comments

Powered by Blogger.