Header Ads



கொழும்பு துறைமுக நகரத்திற்கு எதிராக மனு - விசாரணை செய்ய 5 நீதிபதிகள் குழு நியமனம்


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்றத்தினால் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டே மற்றும் ஜனக் த சில்வா ஆகியவர்கள் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த நீதிபதிகள் குழு முன்னிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.