Header Ads



கஞ்சி பகிர்ந்தளித்தல், இப்தார், 50க்கு மேற்பட்டோர் கூட்டாக தொழுவதற்கும் சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெற்றுக் கொள்ளுங்கள்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை மற்றும் நோன்பு கால தராவீஹ் போன்ற விஷேட தொழு­கை­களில் 50க்கும் மேற்­பட்ட எண்­ணிக்­கை­யா­னோ­ருடன் ஜமா­அத்­தாக தொழு­வ­தற்கு அந்­தந்த பிர­தேச சுகா­தார சேவை அதி­காரி மற்றும் பொதுச் சுகா­தார பரி­சோ­தகர் ஆகி­யோ­ரிடம் எழுத்­து­மூல அனு­ம­தியை பெற்­றுக்­கொள்­ளும்­படி வக்­பு­சபை பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களைக் கோரி­யுள்­ளது.

மேலும் நோன்பு காலத்தில் பள்­ளி­வா­சல்­களில் கஞ்சி பகிர்ந்­த­ளிப்­ப­தற்கும் குறிப்­பிட்ட தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து எழுத்­து­மூல அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும் எனவும் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கையில், ‘ஜும்ஆ உட்­பட ஜமா­அத்­தாக தொழு­வ­தற்கு தற்­போது கொவிட் 19 வழி­காட்­டல்­களின் கீழ் 50 பேருக்கே அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. ரம­ழானில் பெரும் எண்­ணிக்­கை­யானோர் அமல்­களில் ஈடு­ப­டு­வதால் இந்த எண்­ணிக்­கையை அதி­க­ரித்­துக்­கொள்ள அந்­தந்த பிர­தேச சுகா­தார சேவை அதி­காரி மற்றும் பொதுச்­சு­கா­தார பரி­சோ­த­க­ரிடம் எழுத்­து­மூல அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் வக்­பு­சபை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. ஆனால் இது­வரை எவ்­வித பதிலும் கிடைக்­க­வில்லை. இந்­நி­லை­யிலேயே பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் தங்­க­ளது பிர­தேச சுகா­தார அதி­கா­ரி­களைத் தொடர்பு கொண்டு ஏற்­பா­டு­களைச் செய்து கொள்­ளும்­படி வேண்­டப்­ப­டு­கி­றார்கள்.

இப்தார் நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்து கொள்­வ­தற்கும், கஞ்சி பகிர்ந்­த­ளிப்­ப­தற்கும் இந்­ந­டை­முறை பின்­பற்­றப்­பட வேண்டும். நாட்டில் சில பகு­தி­களில் சில பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் கஞ்சி பகிர்ந்­த­ளிப்­ப­தற்­கான அனு­ம­தி­யினைப் பெற்றுக் கொண்­டுள்­ளன. இந்­ந­டை­மு­றையை ஏனைய பள்­ளி­வா­சல்­களும் பின்­பற்­றலாம்.

எழுத்து மூல அனு­ம­தி­யினைப் பெற்றுக்கொள்ளும் பள்ளிவாசல் நிர்வாகங்கள் தொழுகைகளின் போதும், கஞ்சி பகிர்ந்தளித்தல் மற்றும் இப்தார் நிகழ்வுகளிலும் கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றார்.-Vidivelli

No comments

Powered by Blogger.