Header Ads



5 பில்லியன் ரூபாய் பெறுமதியான 170 கிலோ கஞ்சா பிடிபட்டது


- ரொமேஸ் மதுஷங்க -

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான  170 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா தொகையானது, மன்னார்- பள்ளிகுடா பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார், 54ஆம் பிரிவு இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

70 பைகளில் காணப்பட்ட 170 கிலோகிராம் கஞ்சாவை பள்ளிகுடா பிரதேசத்தில் மறைத்து வைத்தது யார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இராணுவத்தினர், மேலதிக விசார​ணைக்காக கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கிளிநொச்சி பொலிஸ் வி​சேட படை முகாமிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.