கொரோனாவினால் உலகளவில் 30 லட்சத்தை கடந்த உயிரிழப்புகள்
உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 30 லட்சத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் எச்சரித்த மறு நாளே இந்த புதிய உயிரிழப்பு எண்ணிக்கை உச்சத்தை எட்டியிருக்கிறது.
உலக அளவில் சனிக்கிழமை நிலவரப்படி 14 கோடியே ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 393 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது பதிவாகியுள்ளது. இதில் 3.15 கோடி பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில், இந்தியாவில்தான் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் ஒரு கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளதாக பதிவாகியுள்ளது.
உயிரிழப்பு அளவில் அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோவுக்கு அடுத்த நிலையில், இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 649 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
Post a Comment