தீவிர ஹிந்துமத விசுவாசி பிரதாபன், 30 வருடங்களான நோன்பு பிடிக்கும் அதிசயம்
திருச்சூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் டி.என்.பிரதாபன் அவர்கள் கடந்த
30 ஆண்டுகளாக தொடர்ந்து ரமலான் மாதம் நோன்பு பிடித்து வருகிறார் என்பது ஆச்சரியமான விஷயம்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது உற்ற நண்பர் கபூர் நோன்பு பிடிப்பதை பார்த்து தானும் நோன்பு பிடிக்க, அது ஆண்டு தோறும் தொடர்ந்து வருவதாக பெருமிதம் கொள்ளும் பிரதாபனின் ரமலான் கால உணவு அட்டவணை கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது..
ஷஹர் நேரத்தில் தனது மனைவி ரமா தயார் செய்து தரும் உணவுடன் ஒரு இளநீர் மற்றும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பிரதாபன்,
இஃப்தார் சமயம் நோன்பு திறக்க இரண்டு துளி தேன் கலந்து ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு, இரண்டு பேரீச்சம் பழம், ஐந்து பதாம் மட்டுமே உட்கொள்ளும் பிரதாபன் சிறிது நேரம் கழித்து கொஞ்சம் ஜீரக கஞ்சி சாப்பிடுவது வழக்கம்..
ரமலான் மாதம் முழுவதும் மீன் இறைச்சி முட்டை உட்பட அசைவ உணவுகள் உண்பதை தவிர்த்து விடுவதாகவும் கூறுகிறார்.
தான் ஒரு தீவிர ஹிந்து மத விசுவாசி என்றும், நம்பிக்கை கொண்டும் கர்மா கொண்டும் ஒரு சனாதன ஹிந்துவாக வாழ்வதாகவும் கூறும் பிரதாபன், ஆண்டு முழுவதும் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் ரமலான் நோன்பு எனக்கு ஒரு Spiritual Experience தருவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார்
Colachel Azheem
Post a Comment