Header Ads



பிரபல 30 குற்றவாளிகள் பூசா சிறைக்கு மாற்றம் - 24 மணித்தியால CCTV, STF கண்காணிப்பு


பூசா அதி பாதுகாப்பு சிறைச்சாலைக்கு 30 கைதிகள் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

பூசா சிறைச்சாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறைக்கூடங்களுக்கே இவர்கள் மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 30 கைதிகளே அதி பாதுகாப்பு சிறைக்கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

24 மணித்தியால CCTV கண்காணிப்பு மற்றும் விசேட அதிரடிப்படையினரின் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் பூசா அதி பாதுகாப்பு சிறைச்சாலை பராமரிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.