Header Ads



எங்கள் இல்லத்தில் 2 இஸ்லாமியர்கள் நோன்பு திறந்ததைவிட ஆனந்தம் வேறேது...? வழக்கறிஞர் திலகர் உருக்கம்


இன்று பெரும் பாக்கியசாலி ஆனேன், சில நாட்களாய் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஏசிக்குப் பதிலாக புது ஏசி மாட்ட முடிவு செய்தேன் ...
கொட்டும் மழையில் புது ஏசியுடன் வந்த கம்பெனி ஊழியர்கள் இருவர் கடகடவென ஏசியை மாட்ட ஆரம்பித்தனர். மாலை நெருங்கும் போதுதான் அவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் என்பது எனக்குத் தெரிந்தது ...
நோன்பு திறக்கும் நேரம் ஆயிற்றே, கொட்டும் மழையில் வெளியில் சென்று எதுவும் வாங்க இயலாத சூழலில், வீட்டுக்காரம்மா பழங்களுடன்,சில பலகாரங்களையும் உடனடியாக தயார் செய்து தந்தார். நாங்கள் அளித்த எளிய உணவை உண்டு எங்கள் இல்லத்திலேயே நோன்பு திறந்தார்கள் அந்த பேரன்பு இஸ்லாமியர்கள். இதைவிட ஆனந்தம் வேறேது..? எங்களை பெரும் பாக்கியசாலியாக்கிய அன்பு சகோதரர்கள். Kalith Rahman & Raja Mohamed இருவருக்கும் மற்றும் இறைவனுக்கும் நன்றி.

பெரும் மகிழ்ச்சியுடன் வழக்கறிஞர் திலகர்


2 comments:

Powered by Blogger.