Header Ads



28 வயது இளைஞன் மரணம் - நீர்கொழும்பில் சம்பவம், 'பொசிடிவ்' முடிவை ஏற்க மறுத்த குடும்பத்தினர்


- இஸ்மதுல் றஹுமான் -

நீர்கொழும்பில் கொரோனாவிற்கு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். இவ் இளைஞன் கடந்த 23ம் திகதி வெள்ளிக் கிழமை நெஞ்சு வலி ஏற்பட்டு நீர்கொழும்பு வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவர் மரணமடையவே, பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்ட போது அதன் முடிவு "பொசிடிவ்" என வந்துள்ளது. இதனை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். பின்னர் சடலம் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு மேலதிக பரிசோதனை நடைபெற்றபோது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நீீீ்ர்கொழும்பு

பிரதான பொது சுகாதார பரிசோதகர் எச்.ஏ.யூ.கே.குனரத்ன தெரிவித்தார்.

நீர்கொழும்பு லுய்ஸ் பிலேஸ், கடற்கரை தெரு சோமசுந்தரம் சுஜானந்தன் எனும் 28 வயது இளைஞனே மரணமடைந்துள்ளார்.

இவரது பூதவுடல் திங்கட்கிழமை காலை நீர்கொழும்பு சுகாதாரத் துறையினரால் நீர்கொழும்பு சேமக்காலையில் தகனம் செய்யப்பட்டது. மரணமடைந்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.