ஒருநாளில் 27,000 கிலோ மீன்களை விற்பனை செய்து, கடற்றொழில் கூட்டுத்தாபனம் சாதனை
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், ஒரு நாளில் அதிகூடிய வருமானத்தை பெற்றுள்ளது
கடந்த திங்கட்கிழமையே இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் இவ்வாறு இலாபத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
வழமையாக நாளொன்றிற்கு 14,000 தொடக்கம் 15,000 கிலோ கிராமுக்கு இடைப்பட்ட மீன்களை விற்பனை செய்யும் கடற்றொழில் கூட்டுத்தாபனம், கடந்த (12) திங்கட்கிழமை 27 ஆயிரத்து 600 கிலோ கிராமுக்கும் அதிகமான மீன்களை விற்பனை செய்துள்ளது.
கடற்றொழில் கூட்டுத்தாபன வரலாற்றிலேயே இது வரையிலும் 20 ஆயிரம் கிலோ கிராமுக்கு அதிகமான மீன்களை விற்பனை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Post a Comment