Header Ads



ஆக்சிஜன் போதாமல் 26 நோயாளிகள் பலி: டெல்லி, பஞ்சாப் மருத்துவமனைகளில் அவலம்


கொரோனா நோய்த் தொற்று காரணமாக டெல்லி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த 20 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணத்தைத் தழுவி இருப்பதாக அந்த மருத்துவமனை கூறுகிறது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மருத்துவமனையில் 6 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

முன்பாக, டெல்லி கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 25 நோயாளிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.32 லட்சம். சுமார் 2,200 பேருக்கு மேல் உயிரிழந்து இருக்கிறார்கள்.

நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. இப்படி ஒரு பக்கம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவதால், தயார் நிலையில் இல்லாத இந்திய மருத்துவக் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது.


No comments

Powered by Blogger.