Header Ads



யாழ்ப்பாண கல்வி வலய, பாடசாலை விடுமுறை ஏப்ரல் 19 வரை நீடிப்பு


யாழ் கல்வி வலயப்பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை மேலும் ஒருவார காலத்திற்கு  நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ள வடமாகாண கல்விஅமைச்சின் செயலாளர் இளங்கோவன் இரண்டாம் தவணை ஆரம்பிக்கும்போதே யாழ்ப்பாண கல்வி வலயப்பாடசாலைகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 29ஆம் திகதி ஒரு வாரத்திற்கு யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.

எனினும், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு விடுமுறை நாளை தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுவதாக இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த கல்வி வலயப் பாடசாலைகள் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பிக்கும்போதே திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார். Thinakkural

No comments

Powered by Blogger.