Header Ads



16 வருடங்களாக தொடர்ந்து, ரமழான் நோன்பு பிடிக்கும் Dr மனோஜ்குமார்


டாக்டர் கே.எஸ்.மனோஜ்குமார் கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து ரமலான் மாதம் முழுவதும் நோன்பு பிடித்து வருகிறார்..

2006 ல் ஆலப்புழா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது, இவருக்கு உதவியாளராக இருந்த இரு முஸ்லிம் ஊழியர்கள் ரமலான் காலங்களில் நோன்பிருப்பதை பார்த்த மனோஜ்குமார் அவர்களுக்கு ஐக்கியம் தெரிவித்து தானும் விரதம் இருக்க துவங்கியதாகவும், பின்னர் அந்த பழக்கம் ஆண்டு தோறும் தொடர்வதாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார்.

இடையில் பல வருடங்கள் மஸ்கட்டில் பதல் அல் ஷமா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய காலத்திலும் நோன்பை தவறவிட்டதில்லை என்று கூறும் டாக்டர் மனோஜ், இந்த வருடம் ரமலான் முதல் இரண்டு நோன்பு ஆலப்புழையில் அருகில் உள்ள மசூதியில் சென்று நோன்பு திறந்ததாகவும், தனது மனைவி இஃப்தாருக்கும் ஷஹர் வைக்கவும் சிரமம் பாராது உணவு பரிமாறுவதாகவும் கூறினார்.

தற்போது ஆலப்புழா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டாக்டர் மனோஜ் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்

Colachel Azheem

No comments

Powered by Blogger.