Header Ads



வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவோர் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர்


வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

புதிய கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் 7-10 நாட்களுக்குப் பின்னரே காணப்படுகின்றன என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

ஆகையால் வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களை ஏழு நாட்களுக்குப் பிறகு வீடுகளுக்கு அனுப்ப முடியாது என்றும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.