Header Ads



1480 மில்லியன் செலவில், சட்டமா திணைக்களத்திற்கு புதிய கட்டடம் - பிரதமரினால் திறந்துவைப்பு (வீடியோ)


சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (30) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

ரூபாய் 1480 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடத் தொகுதி கேட்போர் கூடம், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளடங்களாக பன்னிரண்டு மாடிகளை கொண்டுள்ளது.

குறித்த நிகழ்வில் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா, நீதியமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன, பதில் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜய ராஜரத்னம், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தம்மவர்தன மற்றும் பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.