Header Ads



12 ஆம் திகதி, திங்கள் ரமழான் தலைப்பிறையை பாருங்கள் - கண்டால் உடனடியாக அறிவியுங்கள்


ரமழான் மாதத்­திற்­கான தலைப்பிறை பார்க்கும் நாள் எதிர்­வரும் 12 ஆம் திகதி (ஷஃபான் -பிறை 29) திங்கட் கிழமை மாலை என கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் அறி­வித்­துள்­ளது.

ரமழான் மாதத்­திற்­கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்­வரும் திங்கட் கிழமை மாலை கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், பிறைக்­குழு உல­மாக்கள், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­கள சிரேஷ்ட உத்­தி­யோ­கத்தர், மேமன் ஹனபி பள்­ளி­வாசல் முக்­கி­யஸ்­தர்­களும் இம்­மா­நாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதன்­போது, புனித ரமழான் மாதத்­திற்­கான தலைப்பிறை தொடர்­பான தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. எனவே, அன்­றைய தினம் மாலை பிறை பார்க்­கு­மாறு பெரிய பள்­ளி­வாசல் அறி­வித்­துள்­ளது. பிறை கண்­ட­வர்கள் தகுந்த ஆதாரங்­க­ளுடன் 0112432110, 0112451245, 0777316415 எனும் இலக்­கங்­க­ளுக்கு தொடர்பு கொண்டு அறி­விக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், பிறை தென்­பட்­டமை, இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை­யி­னூ­டாக உத்­தி­யோ­கபூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் எனவும், தலைப்­பிறை சம் பந்­த­மான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ வதந்திகளையோ பகிர்வதை தவிர்ந்துக்கொள்ளுமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.- 

நன்றி Vidivelli

No comments

Powered by Blogger.