Header Ads



முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பின்பற்றாமை தொடர்பில் 10,000 ரூபாய் அபராதம்


நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகமானோனர் மொனராகலை, திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் 3900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமை தொடர்பில் ஒரு நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது மாத சிறைத்தண்டனை விதிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.