Header Ads



சிறிதரன் Mp யின் மகன் மீதுத் தாக்குதல்


- கு.ராஜ் -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது, இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த எண்மர், அவரது மகனின் மீது தாக்குதளை மேற்கொண்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுக்கும் சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.