Helping Wings - Kalkudah - ஹுதா ஜும்மா பள்ளியவாயல் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்
Helping Wings - Kalkudah அமைப்பினர் மற்றும் ஹுதா ஜும்மா பள்ளியவாயல் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் இன்று 06.03.2021 ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்று முடிந்தது.
இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவுமாறு இரத்த வங்கியினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இரத்த தானத்திற்கான முழு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந் நிகழ்வில் 121 பேர் கலந்து கொண்டு 115 பேர் இரத்தக் கொடை வழங்கினார்கள்.
இதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் Helping Wings - Kalkudah அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment