கொரோனா வைரஸ் தொற்று, அபாயம் இன்னும் நீங்கவில்லை - Dr லதாகரன்
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதுவரை 23 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளன.
அதேநேரம் அம்பாறை, காத்தான்குடி, திருகோணமலை, உப்புவெளி, ஏறாவூர், கிண்ணியா, உஹன ஆகிய பிரதேசங்கள் சிவப்பு வலயங்களாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இன்னும் நீங்கவில்லை என்பதுடன் பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக செயற்படுமாறு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் அறிவுறுத்தியுள்ளார். Hiru
Post a Comment