Header Ads



தடுப்பூசி ஏற்றப்பட்ட சிலருக்கு, கொரோனா தொற்று உறுதி Dr சுதர்ஷனி


கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின், சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கொரோனா நோய் கட்டுப்பாடு, ஆரம்ப சுகாதார சேவை இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்குள் சிலருக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்புவோர் தங்களின் பொது சுகாதார பரிசோதகரின் உதவியுடன் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.