Header Ads



வெலிகடை சிறைச்சாலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் ரவி


விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரும் வெலிகடை சிறைச்சாலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு சற்றுமுன்னர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொடவத்த, மஞ்சுள திலகரத்ன மற்றும் மொஹமட் இர்ஷடீன் ஆகிய நீதிபதிகள் குழாமால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரிய ஜனசுந்தர, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்ததையடுத்து, பிரதிவாதிகளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.