Header Ads



இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், இந்நாட்டிற்கு உரித்தானவர்களே, நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை


கொழும்பு இராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்றைய தினம் -04- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட இளைஞர் முன்னணியின் தலைவர் புத்திக்க விக்ரமாதர, 

 ”இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களும் இந்த நாட்டிற்கு உரித்தானவர்களே. அவர்களை நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை.

கொவிட் உடல்களை அடக்கம் செய்ய இரணைதீவு பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றார்கள்.

எனினும் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான பகுதியளவிலான அனுமதியை அப்பிரதேச மக்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இல்லாவிட்டால் ஆள்நடமாட்டம் இல்லாத தீவில் கொவிட் உடல்களை புதைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். IBC

1 comment:

  1. what the hell are talking, did you someone talk about they are not belong to thins country, if you have just ask forgives to Muslim, they are Sri Lankan more then anyone else,

    ReplyDelete

Powered by Blogger.