Header Ads



மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கண்டுபிடியுங்கள் - ஜனாதிபதி உத்தரவு


தற்போது மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் தொகையை தேடி சுற்றிவளைப்புகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தக மற்றும் விவசாய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

தற்போது நிலவும் சூழ்நிலையில் அரிசி இறக்குமதி செய்யாமலிருக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பிலுள்ள நெல்லை அரிசியாக மாற்றி சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக பகிர்ந்தளிப்பதற்கு நேற்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படுமாயின் அரசியை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


1 comment:

Powered by Blogger.