Header Ads



இலங்கை அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவுவதற்கு தயார் - பிரிட்டனின் அமைச்சர் தாரிக்


இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறுதல் நீதி மற்றும் மனித உரிமை விவகாரங்களில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உதவுவதற்கு தயார் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இலங்கையுடன் ஆக்கபூர்வமான விதத்தில் இணைந்து செயற்படுவதற்கு பிரிட்டன் தயாராகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிவடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்வில்  இலங்கை உட்பட பல நாடுகள் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கை குறித்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம் யுத்தத்திற்கு பிந்தைய பொறுப்புக்கூறல் நீதிக்கான சர்வதேச சமூகத்தின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என அகமட் பிரபு தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதத்தில் இந்த தீர்மானம் காணப்படுகின்றது என  குறிப்பிட்டுள்ள அவர் இலங்கையில் மீண்டும் கடந்தகாலத்தின் மோசமான மீறல்கள் இடம்பெறலாம் என அவர் கவலை வெளியிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஐநா இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பதும் எதிர்கால பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளிற்கா ஆதாரங்களை சேகரிப்பதும் சரியான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  (தினக்குரல்)

No comments

Powered by Blogger.