Header Ads



எனது தந்தை தீவிரவாதியோ, பயங்கரவாதியோ அல்ல - ஆமினா, சாலியின் கைது கவலையளிக்கிறது - சூபி தரீக்காக்கள்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

“எனது தந்தை ஒரு தீவி­ர­வா­தியோ, பயங்­க­ர­வா­தியோ அல்ல. அவர் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்த கருத்­துகள் தவ­றான புரி­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. ‘அபே நீதிய அபிட’ (எங்கள் சட்டம் எங்­க­ளுக்கு) எனத் தெரி­வித்­தது நாம் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் கீழேயே திரு­மணம் செய்து கொள்­கிறோம். இது முஸ்­லிம்­க­ளுக்­கான சட்டம். நாட்டில் திரு­மண விட­யத்தில் மாத்­தி­ரமே ஷரீஆ சட்டம் பின்­பற்­றப்­ப­டு­கி­றது. அவர் இங்கு முழு ஷரீஆ சட்­டத்தைப் பற்றிக் குறிப்­பி­ட­வில்லை’’ என பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து விசா­ரிக்­கப்­பட்டு வரும் முன்னாள் மேல்­மா­காண ஆளு­நரும், தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அசாத் சாலியின் புதல்வி ஆமினா சாலி ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­விக்­கையில் குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், எனது தந்தை கடந்த 15ஆம் திகதி சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்டார். ஷரீஆ சட்டம் பற்றி பேசிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­ப­டு­வ­தாக அவ­ரிடம் தெரி­விக்­கப்­பட்­டது. பின்பு அவ­ரது வாக­னத்­தி­லி­ருந்து துப்­பாக்­கி­யொன்று கைப்­பற்­றப்­பட்­ட­தாக அக்­குற்­றச்­சாட்டு மாற்­றப்­பட்­டது. இந்தத் துப்­பாக்கி சட்­ட­ரீ­தி­யாக அனு­ம­திப்­பத்­திரம் பெறப்­பட்­ட­தாகும். பாது­காப்பு அமைச்சின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­து­மாகும்.

பின்பு சி.ஐ.டியினர் எனது தந்தை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­டவர் எனக் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். எனது தந்தை 2017இல் சஹ்­ரானின் நட­வ­டிக்­கைகளை எதிர்த்து பேசி­யுள்­ளார். அவரை மக்கள் மதிக்­கின்­றனர். ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்ட வீடி­யோவில் அவர் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்டம் தொடர்பில் மாத்­தி­ரமே கருத்து தெரி­வித்­துள்ளார் என்றார்.

சாலியின் கைது கவலையளிக்கிறது- சூபி தரீக்காக்கள் தெரிவிப்பு

இலங்­கையில் சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களின் சிவில் அமைப்­பு­களில் ஒன்­றான சூபி தரீக்­காக்­களின் கூட்டுப் பேரவை, முன்னாள் ஆளு­நர் அசாத் சாலி பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டமை தொடர்பில் தனது கவ­லையைத் தெரி­வித்­துள்­ளது.

சூபி தரீக்­காக்­களின் கூட்டுப் பேரவை இது தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது. கூட்டுப் பேர­வையின் தலைவர் நகீப் மௌலானா அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அசாத்­சாலி கடந்த 16ஆம் திகதி குற்­ற­வியல் விசா­ரணை திணைக்­கள அதி­கா­ரி­க­ளினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளமை எங்­க­ளது கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. அவர் வெளி­யிட்ட சில ஊடக அறிக்­கைகள் தொடர்­பிலே கைது செய்­யப்­பட்­டுள்ளார்’ என கடித்­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.- Vidivelli

No comments

Powered by Blogger.