ஹிஜாஸ் மற்றும் புத்தளம் மத்ரசா அதிபருக்கு எதிரான குற்றப்பத்திரிகை புத்தளம் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பு
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம் மத்ரசா பாடசாலையின் அதிபர் மொஹமட் சகீல் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரினால் புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியமை மற்றும் புத்தளம் பிரதேசத்தில் மத்ரசா பாடசாலையொன்றினுள் தீவிரவாதம் கற்பித்தமை ஆகிய குற்றசாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment