அமைச்சர் வாசுவின் தம்பி, தொலைபேசிக்கு தாவினார் - உடனடியாக செயற்குழு உறுப்பினராகவும் நியமனம்
முன்னாள் அமைச்சரும், ஆளுநரும், மவ்பிம ஜனதா கட்சியின் தலைவருமான கலாநிதி ஹேமகுமார நானாயக்கார ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஹேமகுமார நானாயக்காரரிடம் வழங்கினார்.
மேலும், நாட்டின் ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் மையமாகக் கொண்ட ஒரு உழவர் முன்னணியை உருவாக்குவதற்கும் அவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
வேளாண்மை குறித்த நடைமுறை மற்றும் தத்துவார்த்த அறிவைக் கொண்ட ஹேமகுமார நானாயக்கார, இந்த விஷயத்தில் நிறைய ஆராய்ச்சி செய்துவராவார்.
ஹேமகுமார நானாயக்கார இலங்கை சுதந்திரக் கட்சியுடன் அரசியலைத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டில், அனுர பண்டாரநாயக்கவுடன் ஸ்ரீ.ல.சு.க.வை விட்டு வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இனைந்தார்.அப்போதிருந்து அவர் ஐ.தே.க.யை ஆட்சிக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்தார்.2000 ஆம் ஆண்டில் காலி மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2001 இல் மீண்டும் ஐ.தே.க அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் வகித்தார்.
கட்சியின் ஜனநாயகத்தின் மீது தீவிர ஆதரவாளராக இருந்த அவர், நல்லாட்சி காலத்தில் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment