Header Ads



அரபு நாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி - தனிமைப்படுத்தல் இலவசம்


கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில், பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவார்களாயின், அவர்களுக்கான தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் இலவசமாக வழக்கப்படுமென்று, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது.

இது விடயத்தில், தனியார் ஹோட்டல்கள், உல்லாசப் பயணிகள் விடுதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன என்று, அப்பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஹோட்டல்களும் விடுதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ள என்று, தேசிய கொரோனா ஒழிப்பு மையத்தின் அனுமதியுடன் இவை தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அப்பணியகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.