Header Ads



இலங்கையை கண்காணிக்கும் நடவடிக்கையும், தீர்மானமும் உடனடியாக நடைமுறைக்கு வரும் - ஐ.நா. அதிகாரிகள்


ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என  ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கையை கண்காணிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள பணியாளர்களை வைத்துக்கொண்டு இலங்கையை கண்காணிக்கும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள அவர்கள், இந்த வருட இறுதியில் பொதுச்சபை நிதி உதவியை உறுதி செய்ததும் ஏனைய பணிகள் ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தினக்குரல்

No comments

Powered by Blogger.