Header Ads



நீரில் மூழ்கியிருந்த ஜனாசா, அடையாளம் காணப்பட்டது (படங்கள்)


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த சேகு இஸ்மாயில் சப்ராஸ் (மீனி) (வயது – 35) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றில் தொழில் செய்யும் குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் தொழில் நிமிர்த்தம் சென்றவர் மாலை வரை வீடு திரும்பாத சந்தர்ப்பத்தில் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.