Header Ads



புர்கா தடை விடயத்தில் அவசரம் தேவையில்லை - அலி சப்ரி தெரிவிப்பு


புர்கா தடை தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற போதிலும் அது­வி­ட­யத்தில் அவ­ச­ரப்­படத் தேவையில் எனத் தெரி­வித்­துள்ள நீதி­ய­மைச்சர் அலி சப்ரி, அமைச்­ச­ர­வையில் உள்ள சக­ல­ரி­னதும் கருத்­துக்­களைப் பெற்று நாட்­டுக்கு உகந்த தீர்­மானம் ஒன்று எட்­டப்­படும் என்றும் தெரி­வித்தார்.

இது குறித்து ஊட­கங்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்த அவர் மேலும் தெரி­விக்­கையில், சில­ருக்கு சட்டம் தொடர்­பான சரி­யான தெளி­வில்லை. தான் அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் கையொப்­ப­மிட்­ட­தா­கவே அவர் (சரத் வீர­சே­கர) கூறினார். அமைச்­ச­ர­வையில் காத்­தி­ருப்பு பட்­டியல் ஒன்­றுள்­ளது. குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரங்­களே ஒரு அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­படும். புர்கா விட­யத்­திற்கு அவ­ச­ரப்­ப­டத்­தே­வை­யில்லை. அது வந்­ததும் அமைச்­ச­ர­வையில் உள்ள சக­ல­ரதும் அபிப்­பி­ரா­யங்­களைப் பெற்று நாட்­டுக்கு உகந்த தீர்­மானம் ஒன்று எடுக்­கப்­படும் என்றார்.

இதே­வேளை புர்கா தடை தொடர்பில் தான் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யுடன் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும் அதற்கு அவர் எதிர்ப்புத் தெரி­விக்­க­வில்லை என்றும் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீரசேகர சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

No comments

Powered by Blogger.