இலங்கை - ஓமான் நாடுகளுக்கிடையில் விசா ஒப்பந்தம் கைச்சாத்து
இராஜதந்திர, சிறப்பு, சேவை மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான பரஸ்பர வீசா விலக்களிப்பு ஒப்பந்தம், அண்மையில் ஓமானுக்கான இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் அவர்களினால் இலங்கை அரசாங்கம் சார்பில் மஸ்கட்டிலுள்ள ஓமான் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
ஓமான் அரசாங்கத்தின் சார்பில் ஓமான் வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர விவகாரங்களுக்கான செயலாளர் கலீபா அல்ஹார்தி அவர்கள் இந்த ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
இலங்கை மற்றும் ஓமான் நாடுகள் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கைசாத்தானது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர உத்தியோகபூர்வ விஜயங்கள் இலகுவாக இடம்பெற இந்த ஒப்பந்தம் பெரிதும் வழிவகுப்பதோடு இருதரப்பு உறவுகள் இதன் மூலம் மேலும் வலுவடையும் என ஓமானுக்கான இலங்கைத் தூதுவர்அமீர் அஜ்வத் தெரிவித்தார்.
( மனாஸ் ஹுசைன் )
Post a Comment