Header Ads



பிரதமர் மஹிந்தவிடம் மன்னிப்புக் கோரினார் அர்ஜுன ரணதுங்க


ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் கடந்த கால நிர்வாகிகளை விமர்சிப்பதற்காக ஒரு தேசிய நிகழ்வைப் பயன்படுத்தியமை குறித்து முன்னாள் கிரிக்கெட் கெப்டன் அர்ஜுன ரணதுங்க இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கோரினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் தான் இரு மனதில் இருந்ததாகவும் சில ஊழல் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்பதை அறிந்த பின்னர் திரும்பிச் செல்ல விரும்பியதாகவும் ரணதுங்க கூறியுள்ளார்.

1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் உறுப்பினர்களும் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து பாராட்டப்பட்டனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால உட்பட்ட தற்போதைய மற்றும் கிரிக்கெட் சபையின் முன்னாள் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ரணதுங்க, கடந்த கால மற்றும் நிகழ்கால கிரிக்கெட் நிர்வாகிகள் மீது கடுமையாக விமர்சனங்களை வெளியிட்டார்.

இந்தநிலையில் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளாத விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஒரு ஆணைக்குழுவை நியமித்து இலங்கை கிரிக்கெட்டில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை துபாயில் இருந்து திரும்பிய பின்னர் தாம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்று அமைச்சர் நமல் ராஜபக்ஷ ரணதுங்காவுக்கு தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.