ஜனாஸா பெட்டிகளே எரிக்கப்பட்டன என்ற நசீரினால் சர்ச்சை, வெட்கத்துக்குரியது என ஹக்கீம் கண்டனம், தேரர் முறைப்பாடு
இக் கருத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பல்வேறு போராட்டங்களின் பின்னர் சர்வதேசத்தின் தலையீட்டினாலேயே இலங்கையில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமை கிடைக்கப் பெற்றுள்ளது. தனது முயற்சியாலேயே இந்த அனுமதி கிடைத்ததாக நஸீர் அகமட் கூறுவது வெட்கத்துக்குரியதாகும். ஜெனீவாவில் இந்தப் பிரேரணை வந்திருக்காவிடின் ஒருபோதும் எமது உரிமைகள் கிடைத்திராது. அதனால் எனது கட்சியின் உறுப்பினர்களின் இவ்வாறான கருத்துக்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என கண்டியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையில் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதனிடையே நஸீர் அகமட் எம்.பி.யின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி ஜம்புரேவல சந்திரரத்ன தேரர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் நேற்று முன்தினம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார். கொவிட்டினால் உயிரிழப்பவர்களின் விடயத்தில் அரசியல்வாதிகள் தலையீடுவது செய்வது தவறான செயற்பாடு என்றும் நஸீர் அகமட் தெரிவித்த மேற்படி விடயம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானாவும் நஸீர் அகமட்டின் கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.- Vidivelli
Don't talk about this idiot. He is a traitor[Drohi Shakkili nai]
ReplyDeleteafter doing every damage he is trying his bullshit.
இவனுக்கு மாட்டு மூளை என்று மக்கள் பேசிக்கொள்வது சரிதானோ!
ReplyDeleteதமக்குரிய அரசியல் ஆதாயத்தினைத் தேடுவதற்காக மக்கள் அரசியல்வாதிகளைத் தெரிவு செய்வதில்லை. மக்களுக்கு மக்களால் மக்களுக்காகத் (Democracy is of the people; for the people and by the people) தெரிவு செய்யப்பட்ட இவரகள் மக்கள் விரும்புவனவற்றைச் செய்ய வேண்டும். அப்படியில்லாவிட்டால் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட வேண்டும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் யாரும் அவ்வாறு ஒதுங்கியதாக இல்லை. மக்கள் மத்தியில்த்தான் இன்னமும் புத்திஜீவிகளும் வாழ்ந்து கொண்டிருக்கினறனர். அவர்கள் அரசியல்வாதிகள் பேசுகின்ற பேச்சை கொடுப்புக்குள் நகைத்தவண்ணமே அவதானித்துக் கொண்டிருக்கினறனர். 181 ஜனாசாக்கள் எரிக்கப்படவில்லை பெட்டிகள்தான் எரிக்கப்பட்டன என்றால் அதனுள் இருந்த 181 ஜனாசாக்களுக்கும் என்ன நடந்தது? வானத்திற்கு என்ன பறந்தா சென்றன? சில வேளைகளில் அரசியல்வாதிகள் தமக்குள்ளேயே மக்ளை கோமாளியாக்குவதற்காக நடிக்கின்றனரா என்ற சந்தேகம்கூட ஏற்படுகின்றது. மக்கள் அவ்வாறுதான் எண்ணுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க ராஜித சேனாரத்ன மற்றும் இன்னும் சிறந்த பல தலைவர்களை தோற்கடித்த நாடும் மக்களும் வாழும் நாடுதான் இலங்கை. அவரகளையே மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்றால் after-all இவரகள் எம் மக்களுக்கு எம்மாத்திரம்.
ReplyDeleteWhat a RIDICULOUS Claim by this MP Naseer Ahmed!!!!
ReplyDeleteIf ONLY the Boxes were Cremated, will he explain what happened to the Janazas and how they were disposed of?
Gentlmen...நடந்தது நடந்து முடிந்து விட்டது.. இப்போது நீங்கள்கள் எதை கிளறிக்கொண்டிருக்கிறீரகள்? நீங்கள் கிளறுவதால் ஏதாவது நலவுகள் நடக்கப்போகிறதா??? இல்லவே இல்லை...
ReplyDeleteஇன்னும் ஆமான காரியங்கள் எத்தனையோ இருக்கிறது... இன்னும் திரை மறைவில் எத்தனையோ விடயங்கள் பட்டியலில் கிடக்கிறது.. நீங்கள்கள் குந்தித்தான் பனம்பழம் விழுந்தது... ஏற்றுக்கொள்கிறோம்....
இப்போது ஏன் அதை கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்...... ஆம் நீங்கள்கள் குப்பைகளை கிளறி குண்டுமணி தேடும் வேலையை தானே செய்து கொண்டிருக்கிறீர்கள்....