Header Ads



மட்டக்களப்பில் புதியவகை மீன் இனம்..?


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தின் காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள வாவியில் புதிய வகை மீன் இனம் ஒன்று மீனவர் ஒருவரால் இன்று -29- பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் 5 அடி நீளம் உடையதாக இருப்பதுடன் வாவியில் இதுவரைக்கும் பிடிபடாத மீன் இனமாக உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பு போன்று காட்சியளிக்கும் இந்த மீனைக் குறித்த மீனவர் காங்கேயனோடையிலுள்ள தடாகம் ஒன்றில் விட்டுள்ளார்.

இந்த மீனைப் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.