Header Ads



தனிநபரின் விருப்பங்களிற்காக சட்டங்களை மாற்றமுடியாது, நாட்டு பிரஜைகள் சகலரும் சட்டங்களை மதிக்கவேண்டும்


தனிநபர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

மகரஹமவில் இதனை தெரிவித்துள்ள அவர் தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டத்தில் மாற்றங்களை செய்யவேண்டுமென்றால் நிபுணர்கள் குழு அதனை ஆராய்ந்த பின்னரே மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கான அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் குரோத அரசியலிற்கான விதைகளை தூவி சட்டத்தை மீறி பொதுமக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயலும் எவரையும் கைதுசெய்ய தயங்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் பதவிகளிற்கு அப்பால் இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரும் நாட்டின் சட்டங்களை மதிக்கவேண்டும்,தனிநபர் ஒருவரின் விருப்பங்களிற்காக சட்டங்களை மாற்றமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.