கொரோனா உடல்களை இங்கு அடக்காதே - இரணைதீவில் இன்றும் போராட்டம்
இரணைதீவில் இன்று (05) மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று -05- காலை 10.30 அளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் பூதவுடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுமுன்தினம் முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment