Header Ads



நிந்தவூர் பெட்மிடன் சுற்றுப்போட்டி

நிந்தவூர் பெட்மிடன் சம்மேளனத்தினுடைய ஒழுங்கமைப்பின் கீழ் HMYL அமைப்பின் பிரதான அனுசரனையின் மூலமாக நடாத்தப்பட்ட பெட்மிடன் சுற்றுப்போட்டித்தொடரின்  இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் நிந்தவூர் பெட்மிடன் உள்ளக அரங்கில்  இடம்பெற்றது.

இச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் உசாமா, ஹிசாம் மற்றும் ஜிஸ்லி, பயாஸ் ஆகியோர் மோதினர்.

சுவாரஸ்யமான முறையில் இடம்பெற்ற இவ் இறுதிப்போட்டியில் 2:0 எனும் அடிப்படையில் உசாமா மற்றும் ஹிசாம் ஆகியோர் வெற்றி பெற்று சம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்டனர். ஜிஸ்லி மற்றும் பயாஸ் ஆகியோர் முதலாவது ரண்ணர்ஸ் அப் ஆக தெரிவுசெய்யப்பட்டனர்.

 இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் M C M.பைசால் காசிம் அவர்களும், விசேட அதிதிகளாக முன்னால் கிழக்குமாகாண சபை  உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான Mr. ஆரிப் சம்சுதீன் அவர்களும்,கல்முனை பிராந்திய பிரதான மின் பொறியியலாளர் Mr. ஹைகல் அவர்களும் மற்றும் இன்னும் பல முக்கிய அதிதிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.