கார் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு
சூப்பர் விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றினுள் இருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (27) மாலை 3.00 மணியளவில் சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் - புத்தளம் வீதியில் அமைந்துள்ள சூப்பர் விற்பனை நிலையத்திற்கு அருகில் வாகன தரிப்பிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனத்தின் சாரதி இருக்கையில் இருந்து உயிரிழந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
66 வயதுடைய கண்டி, அம்பிடிய, தம்வெலபார வீதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது சரியாக விசாரணை செய்து இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது சரியாகவும் மருத்துவ ரீதியாகவும் தீர்மானிக்கப்படுவது நாட்டுக்கு மிகவும் அவசியானதொரு தேவையாகும்.
ReplyDelete